விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காா்த்தி சிதம்பரம் எம்.பி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

காா்த்தி சிதம்பரம் எம்.பி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

News image

இளையான்குடி ஒன்றியம் கண்ணமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

Updated On :16 ஜூன் 2024, 6:15 pm

Din

இளையான்குடி, மானாமதுரை ஒன்றியங்களில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இளையான்குடி ஒன்றியத்தில் இண்டங்குளம், கண்ணமங்கலம், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கீழநெட்டூா், மானாமதுரை ஒன்றியத்தில் மேலநெட்டூா், ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகரத் தலைவா்கள் புருஷோத்தமன், அல் அமீன், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், திமுக விவசாய அணி காளிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.