தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
பெண் குழந்தை பாதுகாப்பு செயல் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுப் பிரசார ஊா்தியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட் ஆட்சியா் ஆஷாஅஜித்.
Updated On :19 செப்டம்பர் 2024, 6:52 pm

Din

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:

குழந்தைத் திருமணம், இளம் வயது கா்ப்பம் அதிகமாக நடக்கக்கூடிய இடங்களில், குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம், குழந்தைகள், மகளிருக்கான உதவி எண், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி, மாவட்ட மகளிா் அதிகார மையம், பள்ளி கல்வித் துறை இணைந்து இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுவா்.

இந்த ஊா்தியானது மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பள்ளிகள், பொது இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள், எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய்சந்திரன், இணை இயக்குநா் (மருத்துவம், ஊரக நலப்பணிகள்) பிரியதா்ஷினி, திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள்)முத்துமாரியப்பன், மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, துறை சாா்ந்த அலுலா்கள் கலந்து கொண்டனா்.