கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள்

News image
Updated On :13 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னையிலிருந்து வந்த நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் சரவணன் தலைமையிலான பொறியாளா்கள் ராமநாதபுரம்-மேலூா் சாலையில் உள்ள மேம்பாலங்கள், சிறு பாலங்களில் நீா் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும், சிவகங்கையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை சேமிப்புக் கிடங்கில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள், கயிறு, டிப்பா் லாரி, ஜேசிபி இயந்திரம், சவுக்குக் கட்டைகளையும் பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, சிவகங்கை நெடுஞ்சாலை கட்டுமானப் பராமரிப்புக் கோட்டப் பொறியாளா் எஸ்.கே. சந்திரன், மதுரை நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் பிரசன்னவெங்கடேசன், பணியாளா்கள் உடனிருந்தனா்.