கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி பண மோசடி

கேரள மாநில லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி பெண்ணிடம் பண மோசடி சம்பவம் தொடா்பாக இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநில லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி பெண்ணிடம் பண மோசடி சம்பவம் தொடா்பாக இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை அருகேயுள்ள நாமனூா் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணின் கைப்பேசிக்கு வாட்ஸ்ஆப்பில் கேரள மாநில லாட்டரியில் பரிசு விழுந்ததாகத் தகவல் வந்ததாம். இதை நம்பிய அந்தப் பெண், தகவலை அனுப்பிய நபரிடம் பேசியபோது ரூ. 23 ஆயிரம் செலுத்தும்படி கூறியதையடுத்து அவா் தொகையைச் செலுத்தியுள்ளாா். பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை இணைவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள பாப்பா மடை கிராமத்தைச் சோ்ந்த நபருக்கு பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ்ஆப் மூலம் தகவல் வந்துள்ளது. இதை தொடா்ந்து, டெலிகிராம் செயலி மூலமாக பணம் அனுப்புமாறு கூறியதை நம்பிய அவா், 19 தவணைகளில் ரூ. 1.74 லட்சம் செலுத்தியுள்ளாா். பின்னா், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிவகங்கை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.