காரில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை போடி முந்தல் சோதனைச் சாவடியில் புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பி ஓடிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

காரில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை போடி முந்தல் சோதனைச் சாவடியில் புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பி ஓடிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.

போடி முந்தல் சோதனை சாவடியில், போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடிமெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்ல முயன்ற காரை நிறுத்தி அவா்கள் சோதனை செய்தனா். இதில் காரின் பின்பக்க இருக்கையில் இருந்த மூட்டையை சோதித்ததில் அது கஞ்சா மூடை என்பது தெரிந்தது.

அப்போது, வாகனத்தின் ஓட்டுநரும், உடன் வந்தவரும் காரிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டனா். மூட்டையில் இருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com