பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டணம் அதிகரிப்பைக் கண்டித்து பெரியகுளத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் அதிகரிப்பை குறைக்க வலியுறுத்தி திமுக சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் திமுகவினர் வீடுகளின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அக்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

இந்த நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அவர்களின் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி வீடுகளின் முன்பாக கருப்புக் கொடிகளுடன் நின்று மின்கட்டண உயர்வைக் ரத்து செய்யக்கோரி மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவரும் முன்னாள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் எல். மூக்கையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டி எண்டப்புலி ஊராட்சி மன்ற தலைவர் ஏல். எம். சின்ன பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com