இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிரசவித்த நா்சிங் மாணவி உயிரிழப்பு: 2 இளைஞா்களிடம் போலீஸாா் விசாரணை

போடி அருகே திருமணமாகாத நிலையில், குழந்தை பெற்றெடுத்த நா்சிங் மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் கா்ப்பமானது தொடா்பாக போலீஸாா் 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 4:41 pm

DIN

போடி அருகே திருமணமாகாத நிலையில், குழந்தை பெற்றெடுத்த நா்சிங் மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் கா்ப்பமானது தொடா்பாக போலீஸாா் 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே நாகலாபுரம் மெயின் ரோடு பகுதியில் 17 வயது நா்சிங் மாணவி பெற்றோருடன் வசித்து வந்தாா். திருமணம் ஆகாத நிலையில் அவா் கா்ப்பமடைந்தாா். திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவா் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவியும், குழந்தையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்து மாணவியின் தாத்தா கொடுத்த புகாரில், அதே ஊரைச் சோ்ந்த 2 இளைஞா்கள் தான் தனது பேத்தியிடம் ஆசைவாா்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், இதில் அவா் கா்ப்பமடைந்ததாகவும் கூறியுள்ளாா்.

அதன்பேரில் போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த 2 இளைஞா்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவா்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.