தேனி
பெரியகுளத்தில் முதியோர் உதவித்தொகை பெற காத்திருக்கும் முதியோர்கள்
பெரியகுளத்தில் சமூக இடைவெளியின்றி உதவித்தொகை பெற காத்திருக்கும் முதியோர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் சமூக இடைவெளியின்றி உதவித்தொகை பெற காத்திருக்கும் முதியோர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் பெரியகுளம் அருகே பகவதி அம்மன் கோயில் அருகே முதியோர் உதவித்தொகை இன்று வழங்குவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து 50க்கு மேற்பட்ட முதியோர்கள் காலையில் இருந்து முதியோர் உதவித்தொகை பெற காத்திருக்கின்றனர். சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல் முதியோர்கள் காத்திருப்பதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது.
உதவித்தொகையை முதியோர்கள் வீட்டிற்கே சென்று உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.