விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கம்பம் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில், செவ்வாய்க்கிழமை மின்சார உற்பத்தி அதிகரித்தது.

News image
Updated On :14 ஜூன் 2022, 9:24 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில், செவ்வாய்க்கிழமை மின்சார உற்பத்தி அதிகரித்தது. கடந்த ஜூன் 1-ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர்  விநாடிக்கு 300 கன அடியாக திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் மூலம் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள 4 மின்னாக்கிகளில், 1 மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு,  27 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கியது. 

பின்னர் ஜூன் 5-ல், அணையிலிருந்து விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், பெரியாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 37 மெகாவாட்டாக, மின்சாரம் உற்பத்தி அதிகரித்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அணையிலிருந்து, விநாடிக்கு, 500 கன அடியாக அதிகரித்து, அதன் மூலம் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணை நிலவரம்

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 131.15 அடி (மொத்த அடி 142), அணைக்குள் நீர் இருப்பு 4,966 மில்லியன் கன அடி, நீர்வரத்து விநாடிக்கு, 137 கன அடி, தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 500 கன அடி, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 1.6 மில்லி மீட்டர் மழையும் மற்றும் தேக்கடி ஏரியில் 0.4 மி.மீ., மழையும் பெய்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.