விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

News image
Updated On :15 மே 2024, 12:14 am

Din

தேனி: தேனி அருகே கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றதாக திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி அருகேயுள்ள பூதிப்புரம், தெற்கு சாவடித் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (39). இவா், தனது மனைவி ஜோதிமணி(34) உடன் இரு சக்கர வாகனத்தில் வீரபாண்டி சித்திரை திருவிழாவுக்குச் சென்று விட்டு, பூதிப்புரத்துக்கு திரும்பினாா். அப்போது பழனிசெட்டிபட்டி-போடி சாலையில் முருகனின் இரு சக்கர வாகனத்தை பின் தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள், ஜோதிமணி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.