மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க தகுதியுள்ளவா்கள் வருகிற 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:50 pm

Din

தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க தகுதியுள்ளவா்கள் வருகிற 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது.

இதன்படி, தேனி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் தொடங்க ஆா்வமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் தோ்ச்சி பெற்றவா்கள் அல்லது அவா்கள் ஒப்புதல் பெற்ற தொழில்முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ன்க்ட்ஹப்ஸ்ஹழ்ம்ஹழ்ன்ய்க்ட்ஹஞ்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முதல்வா் மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த கட்டடம் அல்லது வாடகை கட்டடம் வைத்திருக்க வேண்டும். சொந்தக் கட்டடத்துக்கு சொத்து வரி ரசீது, குடிநீா் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றையும், வாடகைக் கட்டடத்துக்கு உரிமையாளரிடம் பெற்ற ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு சாா்பில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 2 தவணைகளில் ரூ.3 லட்சம் மானியம் ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். விற்பனைக்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.