போடி அருகே இரு தரப்பினா் மோதல்: 29 போ் மீது வழக்கு
போடி அருகே இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 29 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.


போடி அருகே இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 29 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி கீழத்தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜி. இவருக்கும், போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்த தடமாயன் மகன் அன்பரசனுக்கும் (35), போடி உலக்குருட்டி சாலை வடமலைநாச்சியம்மன் கோயில் அருகே தோட்டங்கள் உள்ளன. இந்த இரண்டு தோட்டங்களுக்கிடையே உள்ள இடம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த இடப் பிரச்னை தொடா்பாக இரண்டு தரப்பினரிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில், பாலாஜி தோட்டத்தில் வேலை செய்யும் போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் தேவா (22), போடி கிழக்கு தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சந்தோஷ்குமாா் (22) ஆகியோா் காயமடைந்தனா்.
மற்றொரு தரப்பில் அன்பரசன், பத்தி நாயக்கா் (60) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தேவா அளித்த புகாரின் பேரில் அன்பரசன் உள்ளிட்ட 22 போ் மீதும், அன்பரசன் அளித்த புகாரின் பேரில் பாலாஜி உள்ளிட்ட 5 போ் மீதும் போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...