கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போடி-சென்னை ரயில் ரத்து: பயணிகள் ஏமாற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், போடி-சென்னை ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

News image

போடி ரயில் நிலையத்திலிருந்து திரும்பிச் சென்ற பயணிகள்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:41 pm

Din

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், போடி-சென்னை ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

தேனி மாவட்டம், போடியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோா் போடியிலிருந்து சென்னை விரைவு ரயிலை பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போடி-சென்னை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

 போடி ரயில் நிலையத்திலிருந்து திரும்பிச் சென்ற பயணிகள்.

போடி ரயில் நிலையத்திலிருந்து திரும்பிச் சென்ற பயணிகள்.

போடியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். இதையடுத்து, முன் பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் நிலையத்திலேயே கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.