கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அவரைச் செடியில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

போடி பகுதியில் அவரைச் செடிகளில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:47 pm

Din

போடி பகுதியில் அவரைச் செடிகளில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

போடி பகுதியில் உள்ள பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் அவரைச் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு நல்ல விளைச்சல் காரணமாக, வரத்து அதிகரிப்பால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரைக் காய் ரூ.18-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ரூ.50 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, தற்போது செடிகளில் அழுகல் நோயும், இலைகளில் மஞ்சள் நோய் தாக்குதலும் ஏற்பட்டது. இதனால், அவரைக் காய்களில் செம்புள்ளி நோய் தாக்கியுள்ளது.

இதனால், விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் காய்களை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனா். விலை அதிகரித்தும் நோய் தாக்குதலால் நல்ல காய்களை மட்டுமே விற்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா். இந்த நோய் தாக்குதலால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.