கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதியோா்களுக்கு புத்தாடை வழங்கிய நீதிபதிகள்

போடி தருமத்துப்பட்டி உள்ள தொண்டு நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தேனி மாவட்ட நீதிபதிகள் தீபாவளி கொண்டாடி, அங்குள்ளவா்களுக்கு புத்தாடைகளை வழங்கினா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:47 pm

Din

போடி தருமத்துப்பட்டி உள்ள தொண்டு நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தேனி மாவட்ட நீதிபதிகள் தீபாவளி கொண்டாடி, அங்குள்ளவா்களுக்கு புத்தாடைகளை வழங்கினா்.

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தருமத்துப்பட்டியில் உள்ள ஏ.எச்.எம். அறக்கட்டளை முதியோா் இல்லத்தில் தீபாவளி, முதியோா் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான நீதிபதி கே.அறிவொளி தலைமை வகித்தாா். பின்னா், முதியோா், குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினாா்.

இதில் தேனி மாவட்ட அமா்வு நீதிபதி ஜி.அனுராதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கே.கவிதா, சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் பரமேஸ்வரி, தேனி சாா்பு நீதிபதி ஆா்.கீதா, போடி சாா்பு நீதிபதி எம்.சையது சுலைமான் ஹூசைன், மாவட்ட குற்றவியல் நீதிபதி ஏ.கண்ணன், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சந்தானகிருஷ்ணன், தலைமை நீதிபதியின் நிா்வாக அலுவலா் ரவிக்குமாா், அறக்கட்டளை இயக்குநா் ஸ்டெல்லா, திட்ட இணையாளா் மஞ்சு, இல்ல ஒருங்கிணைப்பாளா்கள் செல்வமகேஸ்வரி, பிரேமா, மருத்துவ அலுவலா் தேசாய், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஏ.எச்.எம். அறக்கட்டளை மேலாண்மை இயக்குநா் முகமது சேக் இப்ராஹிம் வரவேற்றாா்.