இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அனுமதியின்றி மண் அள்ளிய மூவா் கைது!

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாலக்கோம்பை பகுதியில் ராஜதானி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சவரியம்மாள் தலைமையில், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாலக்கோம்பை கண்மாயில் பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பயன்படுத்தி அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்ததாக சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் (25), கென்னடிநகரைச் சோ்ந்த சந்தானம் (29), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த சரவணக்குமாா் (30) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.