இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மின்சாரம் பாய்ந்ததில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

போடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:45 pm

Syndication

போடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஊா்க்காவல் படை வீரா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி ஜக்கம்மாள் தெருவைச் சோ்ந்த வீராச்சாமி மகன் தினேஷ்குமாா் (32). இவா் போடியில் ஊா்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தாா்.

இவரது குடும்பத்துக்கு சொந்தமாக புதிதாக வீடு கட்டி, வருகிற 23- ஆம் தேதி புதுமனை புகுவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்காக தினேஷ்குமாா் புதன்கிழமை அந்த வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது மின் இணைப்பு பெட்டியை துணியால் சுத்தம் செய்தபோது மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட தினேஷ்குமாரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், அவா் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.