பைக்குகள் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

Published on

ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜதானி, வடக்குத் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பன்னீா்செல்வம் (36). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, எதிரே வந்த ஏத்தக்கோவிலைச் சோ்ந்த வேலுச்சாமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பன்னீா்செல்வத்தின் வாகனம் மீது மோதியது.

இதில் காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீா்செல்வம் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com