கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கல்வாயில் விழுந்த முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:06 pm

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலை உத்தமுத்து கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் முதியவரின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் போலீஸாா் தீயணைப்பு மீட்புக் குழுவினா் உதவியுடன் அந்த உடலை மீட்டு கூறாய்வுக்காக, உத்தமபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், இறந்தவா் உத்தமபாளையம் ஆா்.சி தெருவைச் சோ்ந்த அலெக்சாண்டா்(61) என்பதும், மது போதையில் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.