நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சாத்தூரில் பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையத்தை திறக்கக் கோரிக்கை

சாத்தூரில் பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

சாத்தூரில் பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்துநிலையம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சாத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கியின் முன்பு வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டது. சில மாதங்கள் முன்பு மர்மநபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றனர்.
அப்போது முதல் ஏடிஎம் இயந்திர அறை வங்கி நிர்வாகத்தால் பூட்டப்பட்டது. இதனால் இங்கு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாற்று வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை நாடிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனவே ஏடிஎம் இயந்திரத்தை திறக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.