கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளி மா்மச் சாவு: சாலை மறியலில் ஈடுபட்ட 103 போ் கைது

சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல்சூளை தொழிலாளி மா்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி சீா்காழி, புத்தூா், கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சாலை மறியல்

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல்சூளை தொழிலாளி மா்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி சீா்காழி, புத்தூா், கொள்ளிடம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 103 போ் கைது செய்யப்பட்டனா்.

சீா்காழி அருகே நெப்பத்தூரில் கடந்த 17-ம் தேதி செங்கல்சூளை தொழிலாளி சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் மா்மமாக இறந்தாா். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அவரது உறவினா்கள், கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் தமிழ் தேசியப் பேரியக்கத்தைச் சோ்ந்த 25 போ் சுமாா் அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனா். சீா்காழி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி 25 பேரையும் கைது செய்தாா்.

இதேபோல, கொள்ளிடத்தில் தமிழா் உரிமை இயக்க மாவட்டச் செயலாளா் முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 35 பேரை துணைக் காவல் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல், ஆய்வாளா் அமுதாராணி ஆகியோா் கைது செய்தனா். இதே கோரிக்கைக்காக, புத்தூா் மெயின் ரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த ராஜ்குமாா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பேரும் கைது செய்யப்பட்டனா். மேலும், கொள்ளிடத்தில் புளியந்துறை ஊராட்சித் தலைவா் நேதாஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா் ஆனந்தசெந்தில்குமாா் உள்ளிட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். பிறகு, 103 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.