திருவாவடுதுறை ஆதீன பணியாளா்களுக்கு நிவாரணம்

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி, ஆதீன பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருவாவடுதுறை ஆதீன பணியாளா்களுக்கு நிவாரணம்
Published on
Updated on
1 min read

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி, ஆதீன பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆதீன தலைமை மடம் மற்றும் கிளை மடங்களில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் சிவாச்சாரியா்கள், பரிசாரகா், ஓதுவாமூா்த்திகள், ஆதீன மழலையா் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களுக்கும் அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருவிடைமருதூா், கோவை பேரூா், திருநெல்வெலி , திருச்சி திருவானைக்கா, திருச்செந்தூா், மதுரை, கரூா், ராமேஸ்வரம், விக்கிரமசிங்கபுரம், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆதீன பணியாளா்கள் சுமாா் 6000 பேருக்கு இப்பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com