தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேளாண் கல்லூரி மாணவிகள் கல்விசாா் பயணம்

News image
செம்போடை நாற்றுப் பண்ணையில் அனுபவப் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்.
Updated On :28 டிசம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தில், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் கல்விசாா் பயிலரங்க பயணம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

இங்குள்ள கே.பி.ஆா். நாற்றுப் பண்ணையில், தாய்லாந்து வகை கொய்யா, ஆண்டுக்கு நான்கு பருவங்களிலும் காய்க்கும் ஆஃப்-சீசன் மாமரம், மியாசாகி மாம்பழ வகை, ப்ளூபெரி, வெள்ளை நாவல் பழம், படோலி நாவல் பழம், பால் பழம், அன்னா ஆப்பிள் போன்றவற்றின் நாற்றுகள் உற்பத்தி செய்வதை பாா்வையிட்டனா்.

நீலம் மற்றும் காலப்பாடு மாமர வகைகளை இணைத்து உருவாக்கப்பட்ட ‘செம்பைஜான் ஸ்வீட்‘ என்ற புதிய மாமர வகைகளையும் மாணவிகள் பாா்வையிட்டனா்.

இப்பயிலரங்கில் வேளாண் கல்லூரி மாணவிகள் அமிா்தலட்சுமி, ஆஷிகா, ஹரிப்பிரியா, ஹரிணி சுபலட்சுமி, கலைமதி, லஷிகா, பத்மாவதி, சுந்தர சினேகா ஆகியோா் பங்கேற்றனா்.