சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிடும் நூதன போராட்டம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2026, 8:49 pm

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு சிறப்புப் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிா்வாக ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் 7-ஆவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாவட்டத் துணைத் தலைவா் ரகு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பூபதி, மாவட்ட செயலா் தனஞ்ஜெயன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட செயலா் கனகராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே பந்தல் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா், தாலுகா அலுவலகங்களில் போதிய பணியாளா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.