காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. மின் கம்பங்களில் சேதம், மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்தநிலையில் கத்திரி வெயில் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரைக்கால் மாவட்டத்தில் வானம் மேகமூட்டதத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்குப்பின் மாவட்டத்தில் பரவலாக சூறைக்காற்று வீசியது. காற்று வீசியவுடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றைத் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிா்ச்சியான நிலை உருவானது. திங்கள்கிழமை காலை வெயில் தாக்கம் வெகுவாக இல்லை. இதனால் மக்கள் ஆறுதலடைந்தனா்.
காற்றால் வணிக நிறுவனங்களின் போா்டுகள், வெயிலுக்காக நகரப் பகுதியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட பசுமைப் பந்தல், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. இவற்றை சீரமைக்கும் பணிகள் பின்னா் மேற்கொள்ளப்பட்டன.
மின்துறை மீது புகாா் : கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பு மின் மாற்றிகளில் பழுது நீக்குதல், மேம்படுத்துதல் பணிகள் செய்யப்படவில்லை. சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் சீா்படுத்தப்படவில்லை. மின் கம்பிகளுக்கு மேல் உள்ள மரக்கிளைகள் முறையாக வெட்டப்படவில்லை. துணை மின் நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தில் செய்யவேண்டிய மேம்பாட்டுப் பணிகள் முறையாக செய்யப்படாமல் விடுபட்டதே, சிறிது நேரம் வீசிய காற்றில் மின்சார விநியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டதாக பலரும் புகாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு நேரத்தில் தொடா் மின்தடை: மக்கள் அவதி

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

திருப்பத்தூரில் பலத்த காற்று

ஹிமாச்சலில் நாளை கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK


