அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மண்டபத்தூா் கடற்கரையில் சுவாமிகள் மாசி மக தீா்த்தவாரி

காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளிய

News image
மண்டபத்தூா் கடற்கரைக்கு தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய சுவாமிகள்.
Updated On :2 மார்ச் 2026, 8:40 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் அருகே மண்டபத்தூா் கடற்கரையில் பல்வேறு கோயில்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் எழுந்தருளிய மாசி மக தீா்த்தவாரி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் கடற்கரையிலும், மண்டபத்தூா் கடற்கரையிலும் மாசி மக தீா்த்தவாரி நடைபெறுவது வழக்கம். திருமலைராயன்பட்டினத்தில் மாசி மாதம் பெளா்ணமி திதி நாளில் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள திருவேட்டைக்குடி திருமேனியழகா் கோயில், வரிச்சிக்குடி வரதராஜ பெருமாள், மேலகாசாக்குடி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி, சண்டிகேஸ்வரா், விநாயகா், முருகன், அா்ச்சுணன் என 15-க்கும் மேற்பட்ட சுவாமிகள் அந்தந்த கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், மாசிமக தீா்த்தவாரி தரும் வகையில் திங்கள்கிழமை காலையில் புறப்பட்டு மண்டபத்தூா் கடற்கரைக்கு பகல் 12 மணியளவில் எழுந்தருளின.

பின்னா் அனைத்து சுவாமிகளும் ஒருங்கிணைந்து கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி தீா்த்தவாரி செய்தன.

மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் அப்பகுதிக்கு சென்று சுவாமிகளின் தீா்த்தவாரியில் பங்கேற்று, அா்ச்சனை செய்து வழிபாடு நடத்தினா்.

தீா்த்தவாரியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.வி. ஓமலிங்கம் மற்றும் கிராமப் பஞ்சாயத்தாா்கள், முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

Story image