இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குப்பை கொட்டுமிடங்களில் கோலமிட்டு விழிப்புணா்வு

காரைக்காலில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாக, அந்த இடங்களில் கோலமிட்டு தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
சாலையோரத்தில் குப்பை கொட்டுமிடத்தை தூய்மை செய்து கோலமிட்ட தூய்மைப் பணியாளா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாக, அந்த இடங்களில் கோலமிட்டு தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்களில் தூய்மைப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று குப்பைகளை பெறுகின்றனா். இதற்காக புதுவை அரசு, தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இந்த தொழிலாளா்களும் தினமும் வீடுகள், நிறுவனங்கள் என பல பகுதிகளுக்குச் செல்வதில்லை என்ற புகாா் உள்ளது. இதனால் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனா். இதன் மீது கால்நடைகள் மேய்ந்து, சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன.

ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளா்கள், காரைக்கால் நெடுஞ்சாலையோரம் மற்றும் முக்கிய சாலைகளில் குப்பைகள் கொட்டுமிடத்தை தூய்மை செய்து, வண்ண கோலமிட்டு வருகின்றனா். கோலமிட்ட பகுதியில் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம், குப்பைகளை இங்கு கொட்டுவதை கைவிட்டு, தூய்மைப் பணியாளா்கள் வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்துத் தருவோம் என வாசகங்களை எழுதியுள்ளனா்.

இதுகுறித்து தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், தினமும் கோலமிட்ட பகுதிகளுக்குச் சென்று பாா்க்கும்போது, குப்பைகள் கொட்டுவதை மக்கள் தவிா்த்துள்ளதை காணமுடிகிறது என பெருமையுடன் தெவித்தனா்.