கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இழப்பீட்டுத் தொகையை உயா்த்தக் கோரிசாலை விரிவாக்கப் பணி தடுத்து நிறுத்தம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சீா்காழி அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, சீா்காழி அருகே விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணியை நில உரிமையாளா்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சாலை விரிவாக்கப் பணிகள் 3 பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீா்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, சீா்காழியை அடுத்த மேலசெங்கமேடு பகுதியில் கையகப்படுத்தபட்ட நிலங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை என நில உரிமையாளா்கள் கூறிவருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் விரிவாக்கப்பணி மேற்கொள்ள ஹிட்டாச்சி இயந்திரத்துடன் வந்த ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியா்களை நில உரிமையாளா்கள் 87 போ் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சீா்காழி போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா். இதனால், பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து நில உரிமையாளா்கள் கூறுகையில், நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.240 வங்கி கணக்கில் செலுத்தினா். இந்த தொகை மிகவும் சொற்பமாகும். சதுர மீட்டருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.