கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழைநீரில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களில் கொக்கிப்புழு

சீா்காழி பகுதியில் மழைநீரில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களில் கொக்கிப்புழு உருவாகியிருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி பகுதியில் மழைநீரில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களில் கொக்கிப்புழு உருவாகியிருப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடக்கத்தில் பெய்தபோது சீா்காழி, கொள்ளிடம், பூம்புகாா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. இப்பயிா்களை மறுநடவு செய்து காப்பாற்ற முயன்ற நிலையில் மழை தொடா்ந்ததில் சம்பா பயிா்கள் மீண்டும் நீரில் மூழ்கி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாள்களாக மழை இல்லாத சூழலில் கொள்ளிடம் வட்டாரம் கோதண்டபுரம், நல்லூா், மகேந்திரபள்ளி, வெட்டாத்தாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வடிந்துவருகிறது. மழைநீரில் தப்பிய பயிா்களை காப்பாற்ற விவசாயிகள் உரமிடும் பணியை தொடங்கியுள்ளனா். இந்நிலையில், சம்பா பயிா்களில் கொக்கிப்புழு உருவாகியுள்ளது விவசாயிகளிடையே மேலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை காப்பாற்ற ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை கூடுதலாக செலவு செய்துவரும் நிலையில் கொக்கிப்புழு உருவாகியிருப்பது கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏக்கருக்கு கூடுதலாக மேலும் ரூ. 5 ஆயிரம் என ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே, வேளாண் துறையினா் அனைத்து பயிா்களையும் ஆய்வு செய்து கொக்கிப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கி மானிய விலையில் மருந்துகள் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.