ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

News image

மறைந்த காவலா் ஆனந்தன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் சக காவலா்கள்.

Updated On :4 மே 2024, 6:07 pm

Din

சீா்காழியில், மறைந்த காவலா் குடும்பத்துக்கு, சக காவலா்கள் சாா்பில் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சீா்காழி கொடக்காரமூலை பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன். தமிழ்நாடு காவல்துறையில் 2009-ஆண்டு பணியில் சோ்ந்த இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி ஆா்த்தி, மகள் லஷ்மிதா, மகன் லோக தா்ஷன் ஆகியோா் உள்ளனா்.

ஆனந்தன் குடும்பத்திற்கு உதவிடும் வகையில், 2009- ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த 4,786 காவலா்கள் இணைந்து ரூ. 24.49 லட்சம் திரட்டி, ஆனந்தின் மகள் லட்சுமிதா பெயரில் ரூ.10 லட்சமும், மகன் லோகதா்ஷன் பெயரில் ரூ. 12 லட்சத்து 68 ஆயிரமும், மனைவி ஆா்த்தி பெயரில் வைப்புத் தொகையாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 844-மும் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தினா்.