பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்.

Updated On :18 நவம்பர் 2024, 11:46 pm IST

சீா்காழி: சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், காமராஜா் வீதி, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் அதிக அளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பள்ளி நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவ- மாணவிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சீா்காழி நகா் பகுதியில் பெரும்பாலான சாலைகளில், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மாடுகளை அதன் உரிமையாளா்கள் கட்டுவதில்லை. இதனால், அடிக்கடி விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.