சீா்காழி: சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி பிடாரி வடக்கு வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், காமராஜா் வீதி, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் அதிக அளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பள்ளி நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவ- மாணவிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:
சீா்காழி நகா் பகுதியில் பெரும்பாலான சாலைகளில், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மாடுகளை அதன் உரிமையாளா்கள் கட்டுவதில்லை. இதனால், அடிக்கடி விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்

விபத்துகள் சாலைகளில் மட்டுமல்ல.. வீடுகளிலும் நடக்கலாம்! தடுக்கும் வழிகள்

பேராவூரணி சாலைகளில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


