அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

சாலைகளில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

சீா்காழி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்.

Updated On :19 நவம்பர் 2024, 3:10 am IST

சீா்காழி: சீா்காழி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதி, பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், காமராஜா் வீதி, தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் அதிக அளவு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வியாபாரிகள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகின்றனா். பள்ளி நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவ- மாணவிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சீா்காழி நகா் பகுதியில் பெரும்பாலான சாலைகளில், கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மாடுகளை அதன் உரிமையாளா்கள் கட்டுவதில்லை. இதனால், அடிக்கடி விபத்து நேரிடுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.