கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கடைக்கண் விநாயகர் கோயில் குடமுழுக்கு

சீர்காழி அருகே உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடைக்கண் விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சீர்காழி அருகே உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கடைக்கண் விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருஞானசம்பந்தர் திருமண விழாவில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு, திருமணம் நடைபெறும் இடமான சிவலோக தியாகராஜர் ஆலயத்தை  கடைக்கண்ணால் காட்டி அனுப்பி வைத்த விநாயகர் என இத்தலத்து விநாயகர் பூஜிக்கப்படுகிறார். 
இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, குடமுழுக்குக்காக யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்ததும், மூலவர் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன.
 இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சகாதேவன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.