இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கையை ஏற்க முடியாது! - கர்நாடக முதல்வர்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கையை ஏற்க முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது...

DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 9:51 pm IST

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கையை ஏற்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிரங்கன் அறிக்கையின் அடிப்படையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பால பகுதிகளைச் சூழல் உணர்திறன் மண்டலம் (பாதுகாக்கப்பட்ட பகுதி) என அறிவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு ஏற்காது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஆக. 26) அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதம் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி பகுதியில், கர்நாடகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 33 தாலுக்காக்கள் மற்றும் 1,449 கிராமங்கள் உள்ளடக்கிய 20,668 சதுர கி.மீ. பரப்பளவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்டதாக அறிவித்தால், அங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம், அடிப்படை உள்கட்டமைப்பு, கட்டுமானம், சாலைகள் மற்றும் சுற்றுலா ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், எங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம், அவர்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சிகள் பாதிக்கப்படக் கூடும். எனவே, இந்த அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த அறிக்கையை கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தலைமையிலான அமைச்சரவை நிராகரித்துள்ளதாகவும்; ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் முதல்வர் சிவகுமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Karnataka CM DK Shivakumar has stated that they will not accept the Kasturirangan Committee report on the Western Ghats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.