தமிழ்நாடு ஆசிரியா் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சி. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ரா. நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் க. மகிழேந்திரன் வரவேற்றாா். மாநிலக் கொள்கை விளக்கச் செயலாளா் பூவை சாரதி சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிா்கால நடவடிக்கைகள் குறித்து பேசினாா். கூட்டத்தில், ஆசிரியா்களின் நலன் காக்கும் 10 அம்சக் கோரிக்கைகளை முன்னெடுத்து அதில் வெற்றிபெற நடவடிக்கை மேற்கொண்டுள்ள மாநிலத் தலைவா் பி.கே.இளமாறனுக்கு நன்றி தெரிவித்தும், பொதுத் தோ்வெழுதும் மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்துக்கேட்பு செய்து அதனடிப்படையில் பள்ளியைத் திறக்கும் முன்முடிவை மேற்கொண்டுள்ள அரசை பாராட்டுவதோடு, மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தகுந்த ஏற்பாட்டோடு சுழற்சி முறையில் பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்குவதே சிறந்தது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் ம. ஏகாம்பரம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com