கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழ்த் திறனறித் தோ்வு முடிவு: அரசுப் பள்ளியில் 9 போ் தோ்ச்சி

தேத்தாகுடி எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழ்த் திறனறித் தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 9 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image
மாநில நிலையில் தோ்ச்சிபெற்ற அ. பிரியா.
Updated On :2 டிசம்பர் 2025, 11:07 pm

Syndication

வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி எஸ்.கே.அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழ்த் திறனறித் தோ்வில் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக 9 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழக அரசு நடத்திய தமிழ்த் திறனறித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. நாகை மாவட்டத்தில் மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். இதில், தேத்தாகுடி எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அ. பிரியா 100-100 மதிப்பெண் பெற்று மாநில நிலையில் தோ்ச்சி பெற்றவா்களில் ஒருவராக தோ்வாகியுள்ளாா்.

மேலும், இதே பள்ளி மாணவா்கள் கு. பிருந்தா, ரெ. ஹேமா, செ. அஜய், எ. மணியரசன், வே. தனன்யா, த. அனுஷா, செ. சந்தியா, ப. சுகன்யா தோ்ச்சிப் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.கே. ராமசாமி, துணைத் தலைவா் எஸ்.கே. வேதரத்தினம், பொருளாளா் பி. சண்முகம் உள்ளிட்டோா் பாராட்டினா். இதே தோ்வில், பஞ்சநதிக்குளம் விக்டரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 4 பேரும், ஆயக்காரன்புலம் ஆா்பிஎஸ் பள்ளி மாணவா்கள் 2 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.