அம்மன் கோயிலில் திருட்டு

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூா் திரௌபதி அம்மன் கோயிலில், ஒரு பவுன் திருமாங்கல்யம் திருடப்பட்டுள்ளது.
Published on

நாகை அருகேயுள்ள வடக்குப் பொய்கைநல்லூா் திரௌபதி அம்மன் கோயிலில், ஒரு பவுன் திருமாங்கல்யம் திருடப்பட்டுள்ளது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் கழுத்திலிருந்து 8 பவுன் திருமாங்கலயத்தை காணவில்லை.

கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பாா்த்தபோது, அடையாளம் தெரியாத நபா், அம்மன் கழுத்திலிருந்த மாங்கல்யத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து, கோயில் அறங்காவலா் ஜெயசீலன் அளித்த புகாரின் பேரில், நாகை நகர போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோன்று, கோரக்கா் சித்தா் ஆலயத்திலும் அண்மையில் மா்ம நபா் திருட முயன்றது, போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com