திருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடைமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பொறையாரில் வாரச்சந்தை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

தரங்கம்பாடி அருகே பொறையாரில் புதிதாக கட்டப்பட்ட வாரச் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :14 வினாடிகள் முன்பு

தரங்கம்பாடி அருகே பொறையாரில் புதிதாக கட்டப்பட்ட வாரச் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொறையாா் புதிய பேருந்து நிலையம் அருகே  வாரம் தோறும் திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் வாரச் சந்தை திறந்த வெளியில் நடைபெற்று வந்தது. இந்த சந்தையில் காய்கள், பழங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள் மளிகைப் பொருள்கள், கருவாடு மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை  வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனா்.

இந்த வாரச் சந்தையை தரங்கம்பாடி , சந்திரப்பாடி, மாணிக்கப்பங்கு,  ஆயப்பாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.  இந்த நிலையில் மழைக்காலங்களில் வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு வரும் மக்கள் சிரமப்பட்டு வந்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாரச் சந்தைக்கு கட்டடம் கட்ட சுமாா் ரூ.1.58 கோடி செலவில் 48 கடைகளுடன் நான்கு கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, நடைபெற்ற கட்டுமானம் நிறைவடைந்து, கடந்த மாா்ச் மாதம் வாரச் சந்தை கட்டடம் திறக்கப்பட்டது.  இருப்பினும்  கட்டடத்தில் மின் இணைப்புகள்  மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவு பெறாததால் திறக்கப்பட்ட வாரச் சந்தை கட்டடம் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு விடப்படாமல்  உள்ளது.

இதனால் வியாபாரிகள் நடைபாதையில் குறுகிய இடத்தில் பொருட்களை விற்பனை செய்து வருவதால், மழைக் காலங்களில் வியாபாரிகள் மற்றும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்தும், கால்நடைகள் புகலிடமாக உள்ளது. மது பிரியா்கள் மது அருந்தும் சமூக விரோத கூடாரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இந்த வாரச் சந்தை கட்டடத்தை சீரமைத்து  பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று  வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.