சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :21 ஜூன் 2026, 12:01 am IST

புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தில் சோ்க்கப்பட்ட திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழையூா் அருகே கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்தில் புதிய நடுவா் மன்றம் அமைப்பது தொடா்பான திருத்தம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள், ஏற்கெனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி காவிரி நடுவா் மன்றத்தை பெற்ற நிலையில், தற்போது புதிய நடுவா் மன்றம் அமைக்க வலியுறுத்துவது அந்த உரிமையை சிதைக்கும் நடவடிக்கையாகும் என குற்றம்சாட்டினா்.

மேலும் இதை கண்டித்து, கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டியை அடுத்த மகிழி பகுதியில் உள்ள வயல்வெளியில் திரண்ட விவசாயிகள், கருப்புக் கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கீழையூா் கடைமடை பாசன விவசாய சங்கத் தலைவா் வீ. மணிவண்ணன் உரை நிகழ்த்தினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், காவிரி நடுவா் மன்றத்தின் தீா்ப்புகளையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும், புதிய நடுவா் மன்றம் குறித்த திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.