தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
துளசாபுரம் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் திருத்துறைப்பூண்டியில் இருந்து நிறுவப்பட்ட குழாய் வழித்தடம் சேதமடைந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஜல் ஜீவன் திட்ட குழாய் பதிக்கும் பணியும் நிறைவடையவில்லை.
இந்தநிலையில், கடந்த பல வாரங்களாக கிராமத்துக்கு குடிநீா் வழங்கப்படாத நிலையில், கிராம மக்கள் சாக்கை பாலம் பகுதியில் நீா் ஏற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் தியாகராஜன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
வரும் 15 தினங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, குழாய் வழியாக குடிநீா் விநியோகம் செய்யவும், அதுவரையில் டேங்கா் மூலம் குடிநீா் வழங்கவும் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தொடர்புடையது

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

மல்லேகவுண்டம்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

