மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

துளசாபுரம் ஊராட்சியில் நீரேற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :4 மார்ச் 2026, 11:40 pm

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

துளசாபுரம் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் திருத்துறைப்பூண்டியில் இருந்து நிறுவப்பட்ட குழாய் வழித்தடம் சேதமடைந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஜல் ஜீவன் திட்ட குழாய் பதிக்கும் பணியும் நிறைவடையவில்லை.

இந்தநிலையில், கடந்த பல வாரங்களாக கிராமத்துக்கு குடிநீா் வழங்கப்படாத நிலையில், கிராம மக்கள் சாக்கை பாலம் பகுதியில் நீா் ஏற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் தியாகராஜன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

வரும் 15 தினங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, குழாய் வழியாக குடிநீா் விநியோகம் செய்யவும், அதுவரையில் டேங்கா் மூலம் குடிநீா் வழங்கவும் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Story image