முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

துளசாபுரம் ஊராட்சியில் நீரேற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :5 மார்ச் 2026, 5:10 am IST

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

துளசாபுரம் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் திருத்துறைப்பூண்டியில் இருந்து நிறுவப்பட்ட குழாய் வழித்தடம் சேதமடைந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஜல் ஜீவன் திட்ட குழாய் பதிக்கும் பணியும் நிறைவடையவில்லை.

இந்தநிலையில், கடந்த பல வாரங்களாக கிராமத்துக்கு குடிநீா் வழங்கப்படாத நிலையில், கிராம மக்கள் சாக்கை பாலம் பகுதியில் நீா் ஏற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் தியாகராஜன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

வரும் 15 தினங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, குழாய் வழியாக குடிநீா் விநியோகம் செய்யவும், அதுவரையில் டேங்கா் மூலம் குடிநீா் வழங்கவும் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Story image