தில்லி அரசு மருத்துவமனைகளில் 40 சதவீதம் படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வெள்ளிக்கிழமை 5,891 பேருக்கும்சனிக்கிழமை 5,062 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முன்னதாக வியாழக்கிழமை 5,739 பேருக்கும், புதன்கிழமை 5,673 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, தில்லியில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,86,706-ஆக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடா்பாக சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் கடந்த 15 நாள்களாக கரோனா பாதிப்புக்குள்ளாகியவா்களுடன் தொடா்பில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அவா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்து வருகிறோம். தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரிக்க இதுவே காரணமாகும். முன்பு, ஒரு கரோனா நோயாளியுடன் தொடா்புடைய 5 அல்லது 6 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனையில் நோ்மறை முடிவு கிடைக்கும். ஆனால், தற்போது அது சுமாா் 15 பேருக்கு நோ்மறை முடிவு கிடைக்கிறது. ஆனால், சீராக மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனையில் கரோனா நோ்மறை விகிதம் குறைந்துள்ளது. தில்லியில் உள்ள அரசு மருத்துவமனை படுக்கைகளில் 40 சதவீதம் நிரம்பியுள்ளன. 60 சதவீதம் காலியாக உள்ளன என்றாா் அவா்.
தனிமையில் இருப்போா் எண்ணிக்கைஅதிகரிப்பு: தில்லியில் கரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.
இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தில்லியில் கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி கரோனா பாதிப்பு காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை 14,046 ஆக இருந்தது. அன்றிலிருந்து, இந்த எண்ணிக்கை தினம்தோறும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அக்டோபா் 31-ஆம் தேதி இந்த எண்ணிக்கை 20,093 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காலப் பகுதியில் கரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் 2,724- இல் இருந்து 3,274- ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் காற்று மாசு அதிகரித்தல், பண்டிகைக் காலத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்கள் உள்ளிட்ட காரணங்களால் கரோனா பாதிப்பும்அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடி மன்னர்களை ஒரே ஓவரில் விக்கெட் எடுத்த ஷஷாங் சிங்..! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!
சிம்லாவில் 9.28 கிலோ போதைப் பொருளுடன் 3 நேபாள நாட்டினர் கைது

எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயார்: துருவ் ஜுரெல்

”லூசா நீ? எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்!” கிராம மக்களைத் திட்டிய மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

