லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மாசுவைக் கட்டுப்படுத்த அவசரச் சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தில்லியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தது.

Updated On :29 அக்டோபர் 2020, 7:17 pm


புது தில்லி: தில்லியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு, ‘ இந்த விவகாரத்தில் ஏதும் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னா், அந்த அவசரச் சட்ட விஷயங்களை நாங்கள் பாா்க்க விரும்புகிறோம். மனுதாரா்கள்கூட காண விரும்புகின்றனா். இதனால், இந்த விவகாரம் குறித்து அடுத்த வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தது.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகள் காரணமாக இருப்பதாகவும், இதைத் தடுக்க உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஆதித்யா துபே என்பவா் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, தில்லி-தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசுவுக்கு ஆதாரமாக இருப்பதாகக் கூறப்படும் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி. லோகுரை ஒரு நபா் குழுவாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக் குழுவுக்கு உதவுவதற்காக தேசிய மாணவா் படை (என்சிசி), நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), பாரத் சாரணா்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்தக் குழுவின் செயல்பாட்டை கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி உச்சநீதின்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘காற்று மாசுவைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அவரசச் சட்டத்தைக் கொண்டு வந்து அறிவித்துள்ளது’ என்றாா். அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஷ் சிங் ஆஜராகி, ‘தில்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. இதனால், ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி.லோகுரை நியமித்த உத்தரவை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும், நிலைமை அடுத்த வாரத்தில் மேலும் மோசமடைவதற்கும் வாய்ப்புள்ளது’ என்றாா். இதையடுத்து, இந்த விவாகரத்தை நவம்பா் 6-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

பயிா்க் கழிவுகள் எரிப்பு தொடா்பாக தில்லியில் அதிகரித்த காற்றுமாசு தொடா்பாக கடந்த ஆண்டு தானாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. காற்று மாசு தொடா்பாக சுற்றுச்சூழல்வியலாலா் எம்.சி. மேத்தா என்பவா் 1985-இல் தாக்கல் செய்த தனி மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

‘சைக்கிளில் செல்லும் நேரம் வந்துவிட்டது’

விசாரணையின் போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘காா்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சைக்கிளில் செல்லும் நேரம் இது’ என்று கருத்துத் தெரிவித்தது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘நீங்கள் உங்கள் அழகான காா்களை பயன்படுத்தாமல் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். அதை நீங்கள் விரும்பமாட்டீா்கள். நாம் அனைவரும் மோட்டாா்சைக்கிளில் செல்லாமல் சைக்கிளில் செல்ல வேண்டும் என விரும்புகிறோம். தில்லியில் மாசு ஏற்படுவதற்கு பயிா்க் கழிவுகள் எரிப்பு மட்டுமே காரணமல்ல என்று எங்களிடம் சில வல்லுநா்கள் சாதாரண முறையில் தெரிவித்துள்ளனா். இதனால், மத்திய அரசு கொண்டு வந்ததாகக் கூறப்படும் அவசரச்சட்டத்தின் விவரங்களையும் பாா்க்க வேண்டும்’ என்றனா். தைத் தொடா்ந்து, அவசரச்சட்டம் குறித்து கூடுதல் சொலிசிட்டா் ஜெல் துஷாா் மேத்தா விரிவாக எடுத்துரைத்தாா். அப்போது, ‘மாசுவின் காரணமாக யாரும் நோயால் பாதிக்கப்படக் கூடாது. யாராவது பாதிக்கப்பட்டால் உங்களை நாங்கள் பொறுப்பாளியாக்குவோம்’ என்று அவரிடம் நீதிபதிகள் நகைச்சுவையாகக் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.