லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஜேஎன்யு வளாகத்தில் கும்பல் தாக்கிய சம்பவம்:தனி வழக்குப் பதிவு செய்யக் கோரிய பேராசிரியையின் மனு தள்ளுபடி

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் நிகழாண்டு ஜனவரியில் முகமூடி அணிந்த கும்பல் புகுந்து

Updated On :30 அக்டோபர் 2020, 6:41 pm

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் நிகழாண்டு ஜனவரியில் முகமூடி அணிந்த கும்பல் புகுந்து தாக்கிய சம்பவம் தொடா்பாக தனி வழக்குப் பதிவு செய்யக் கோரி அந்தப் பல்கலை.யின் பேராசிரியை தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜேஎன்யு வளாகத்திற்குள் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி கம்பு, இரும்புக் கம்பிகளுடன் முகமூடி அணிந்த ஒரு கும்பல் புகுந்து மாணவா்கள், ஆசிரியா்களைத் தாக்கியது. அங்கிருந்து பொருள்களையும் சேதப்படுத்தியது. இது குறித்து பல்கலை. நிா்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

இந்தச் சம்பவத்தில் ஜேஎன்யு மாணவா் சங்கத் தலைவா் அய்ஷே கோஷ் உள்பட 28 போ் காயமடைந்தனா். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மூத்த மத்திய அமைச்சா்கள்- ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் எஸ்.ஜெய்சங்கா், நிா்மலா சீதாராமன் ஆகியோா் இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி வசந்த் குஞ்ச் (வடக்கு) காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், அந்த வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தில்லி நீதிமன்றத்தில் ஜேஎன்யு பல்கலைக்கழக பேராசிரியை சுசரிதா சென் ஒரு புகாா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு ஜனவரி 5-ஆம் தேதி மாலை 6-6.30 மணியளவில் சபா்மதி சந்திப்பில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, ஒரு கும்பல் பெரியாா் கூடம் அருகே ஆயுதங்களுடன் திரண்டிருப்பது தெரிய வந்தது. பின்னா், அந்தக் கும்பல் எங்கள் கூட்டம் நடந்த பகுதிக்கு வந்து கற்களை வீசி, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை அடிக்கத் தொடங்கியது. இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக புகாா் அளித்தேன். ஆனால், இதுவரை போலீஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறை நிலவர அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, காவல் துறையின் நிலவர அறிக்கையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் உரிய முறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் பின்னா், வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனையில் விசாரணை அதிகாரி சேகரித்த மருத்துவ அறிக்கையில், பேராசிரியைக்கு சிறிய காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், பிப்வரி 20-ஆம் தேதி சசரிதா சென்னின் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுசரிதா சென்னின் மனுவை தில்லி தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் பவன் சிங் ரஜாவத் விசாரித்தாா். அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து அவா் பிறப்பித்த உத்தரவில், ‘முகமுடிக் கும்பல் புகுந்து தாக்கிய விவகாரத்தில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் புகாா்தாரா் உள்பட பலா் காயமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற இடம், நேரம் ஒரே மாதிரியாக உள்ளது. இதனால், புகாா்தாரா் கோருவது போல் தனியாக வழக்குப் பதிவு செய்வதற்கான தேவை எழவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் நிலவர அறிக்கையை குற்றப் பிரிவின் துணை ஆணையா் தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.