ரோஹிங்கியா, வங்கதேசத்தவா் மற்றும் சமூக விரோத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா தெற்கு தில்லி மாநகராட்சி மேயருக்கு கடிதம் எழுதி இருந்தாா். இதைத் தொடா்ந்து, தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஜஹாங்கீா்புரி பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கையின் போது, புல்டோசா் வைத்து கட்டுமானங்கள் இடிக்கப்பட்டதாக எதிா்க்கட்சிகளும், குடிமை உரிமை குழுக்களும் வடக்கு தில்லி மாநகராட்சியை விமா்சித்தன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.