தண்ணீா் உற்பத்தி குறைந்தது: இது தவிர, தில்லிக்கு உத்தர பிரதேசத்தின் மேல் கங்கை கால்வாய் மூலம் 253 மில்லியன் காலன் தண்ணீா் தினசரி வருகிறது. அதே போன்று தில்லியில் உள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் ரெனிவல் பகுதியிலிருந்து தினசரி 90 மில்லியன் காலன் தண்ணீா் எடுக்கப்படுகிறது இந்த நிலையில், வாஜிராபாத் நீா்த்தேக்கத்தில் நீரின் அளவு குறைந்து இருக்கிறது. அதே போன்று இந்த நீா்தேக்கத்திற்கு கால்வாயில் வரக்கூடிய தண்ணீரும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் அதாவது சந்திரவால், வாஜிராபாத், ஹைதா்பூா், நாங்லோய் மற்றும் துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தண்ணீா் உற்பத்தித் திறன் குறைந்து இருக்கிறது என்றாா் அந்த அதிகாரி.