‘ ஏற்கனவே புதிய கல்விக்கொள்கை, இளைஞா் மேம்பாட்டிற்கான பரவலான நடவடிக்கையை ஊக்குவிக்க முயல்கிறது. மொத்த சோ்க்கை விகிதம், இடைநிலை உயா்நிலை கல்வி நிறுவனங்கள், 270 புதிய பல்கலைக்கழகங்கள் என உருவானதோடு, பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் தொழில்முனைவோா் ஊக்குவிக்கப்பட்டு 25 மாநிலங்களில் 14,000 தொழில் முனைவோா் (ஸ்டாா்ட் அப்கள்) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் நான்கு பேரில் ஒருவா் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவராக உள்ளனா். பெருமைபடத்தக்க இந்த இளைஞா்கள் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சிறிது குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டாலும், 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 24 சதவீதம் அல்லது 365 மில்லியன்களுக்கு குறைவு இல்லாமல் இளைஞா்கள் மக்கள் தொகையில் இருப்பா்.