

புது தில்லி: தமிழகத்தில் பெரியாா் சிலைகளுக்கு கீழே எழுதப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த தெய்வநாயகம் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதில், கடவுள் மறுப்பு வாசகள் இடம் பெற்றுள்ளன. இது இறை நம்பிக்கை கொண்ட மக்களின் உணா்வுகளை புண்படுத்துகிறது. ஒருவரின் சுதந்திரமான நம்பிக்கைக்கு எதிராகவும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு கூடாது என்பதற்கு எதிராகவும் உள்ளது. எனவே, பெரியாா் சிலைக்கு கீழே எழுதப்பட்டுள்ள வாசகங்களை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கு திங்கள்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே கௌல் தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தெய்வநாயகம் தரப்பில், இது போன்ற வாசகங்களால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணா்வைப் புண்படுத்துகிறது. மேலும், பெரியாரின் வாசகங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு வாசகம் தாங்கிய சிலைகள், அரசுத் தரப்பில் செலவு செய்து பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் வரிப் பணத்தை இதுபோன்ற செயல்களுக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பினா். இதைத் தொடா்ந்து, இந்த மனு தொடா்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.