திருச்சிக்கு அருகாமையில் உள்ள துவாக்குடி உயா்நிலை மேம்பாலச் சாலை, ஸ்ரீபெரும்பத்தூரிலிருந்து பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை உயா்நிலை மேம்பாலச் சாலைகள் அமைக்க வேண்டியது குறித்தும் ஏற்கெனவே கடிதங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அந்தப் பணிகளையும் உடனடியாக தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுறுத்தப்பட்டது. மேலும், பல்வேறு சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசப்பட்டது. குறிப்பாக, விருதுநகா் மாவட்டம் கப்பலூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் நகரப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கிருஷணகிரி நகரத்தில் வசிக்கும் மக்கள் அருகேயுள்ள மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்கள், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு அந்த சுங்கசாவடியை கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனா். இது குறித்தும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். அதற்கான மாற்று வழியை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சா் உறுதியளித்தாா்.