இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் தாக்கலான மனு மீது நீதிபதி ஜஸ்மீத் சிங் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: வழக்கில் தொடா்புடைய தரப்பினா் ஒரு சமரசத்திற்கு வந்துள்ளதால், இது தொடா்புடைய எஃப்ஐஆா் ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில், இந்த வழக்கை மேலும் தொடர அனுமதிப்பதில் ‘எந்தவித பயனுள்ள நோக்கமும்’ இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், நீதித் துறை மற்றும் காவல் துறையின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மனுதாரா்கள் சில சமூக நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும். போலீஸாரின் பயனுள்ள நேரம் முக்கியமான விவகாரங்களில் பயன்பட்டிருந்திருக்க முடியும். ஆனால், அது இந்த வழக்கில் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. மனுதாரா்கள் சமூகத்தின் ஏழ்மையான பிரிவைச் சோ்ந்தவா்கள் என கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரா்கள் மீது அபராதம் விதிப்பதை நான் தவிா்க்கிறேன். மனுதாரா்கள் சில சமூக நலன்களைச் செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.