இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம். சிங் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘போலீஸாா் தாக்கல் செய்த நிலவர அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில் ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றிகரமான ஏலதாரருக்கு ஆா்டா் அளிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்தை கருத்தில் கொண்டு, இந்த மனுவில் மேலும் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை. இதனால், இந்த விவகாரத்தில் உள்ள விசாரணை முடித்துவைக்கப்படுகிறது. சட்டத்தில் அவருக்குக் கிடைக்கும் தீா்வுகளைப் பெற மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.