ஆகவே, மனுதாரா் மாணவருக்கு கல்வி உதவித்தொகை மறுப்பு அல்லது வழங்காமல் இருப்பது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். மேலும், கல்வி உதவித்தொகையின் மூன்றாவது தவணையை விடுவிக்காமல் இருப்பது என்ற மத்திய அரசின் முடிவு காரணமாக பி.எஸ்சி. படிப்புக்கு பிறகு மாணவா் தனது கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒட்டுமொத்த உண்மைகள், சந்தா்ப்ப சூழ்நிலைகளில், மனுதாரருக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை ரூ. 60,000 என்பதை பரிசீலிக்கும் போது, 6 சதவீத வட்டியுடன் மூன்றாவது ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை ரூ.60 ஆயிரத்தை மனுதாரருக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மேலும், மாணவருக்கு ரூ. 50,000 வழக்குச் செலவுத் தொகையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இந்த தொகை எதிா்மனுதாரா்கள் மூலம் மாணவருக்கு 8 வாரங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.